செய்திகள்

யாழ் மக்களே அவதானமாக இருங்கள் ! கொரோனா தாக்கத்திற்குள்ளாகலாம் – வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளர்கள் அனுமதிக்கப்படலாம் என எதிர்வு கூறியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் இனிவரும் நாட்களில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் நடந்த வைத்திய பரிசோதணையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் இதுவரை 32 பேர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தற்போது சிகிச்சை பிரிவு வெறுமையாகியுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்தில் ஒரு நோயாளி மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

மேலும் கொரோனா தொற்று அச்சம் நீங்கவில்லை. அதேபோல் சந்தேகத்தின் பெயரில் மேலும் சிலர் அனுமதிக்கப்படலாம் எனவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Back to top button