ஆன்மிகம்

(06.08.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்வெள்ளிக்கிழமை
திதிதிரயோதசி மாலை 6.50 வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்திருவாதிரை காலை 7.38 வரை பிறகு புனர்பூசம்
யோகம்சித்தயோகம்
ராகுகாலம்காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம்பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம்காலை 9.15 முதல் 10.15 வரை / பகல் 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்அனுஷம் காலை 7.38 வரை பிறகு கேட்டை
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
Today rasi palan tamil

மேஷ ராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு நீண்டநாள்களாகத் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். இன்று அம்பிகையை தரிசிக்க நற்பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவர வுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். முருகப்பெருமான் வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், குடும்பம் தொடர்பான விஷயத்தில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். பிள்ளைகளின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சிலருக்குத் தாய்மாமன் வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். அம்பிகையை வழிபடுவது நன்மை தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழியில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். என்றாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகள் தங்கள் பிடிவாதப் போக்கை மாற்றிக் கொள்வர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

ல வகைகளிலும் அனுகூலமான நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். ஆனால், பெரியவர்களின் ஆலோசனை மிக முக்கியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வெளியிடங்களில் சாப்பிடுவ தைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன் விஷயத்தில் எச்சரிக்கை யாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்அலைச்சலுடன் வீண் விவாதங்களையும் தவிர்க்கவும்.

துலா ராசி அன்பர்களே!

றவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் முயற்சியில் எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். துணிச்சலுடன் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

ன்றைக்கு பதற்றம் தவிர்த்து எதிலும் நிதானமாகச் செயல்படவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு ராசி அன்பர்களே!

திர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் தேவையைப் பூர்த்திசெய்து மகிழ்வீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். பள்ளி, கல்லூரி கால நண்பர்கள் தொடர்புகொண்டு பேசுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கரமாக இருப்பார்கள். பிற்பகலுக்குமேல் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.

கும்ப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். அடிக்கடி மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். இன்று வீரபத்திரரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

மீன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

Back to top button