செய்திகள்

நாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்றைய நிலவரத்தின் படி 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு  திரும்பிய நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

அதற்கமைய இந்தியவில் இருந்து நாட்டிற்கு வந்த 2 பேர் , பிலிப்பைன்ஸ் கடலோடி ஒருவருக்கும் , இஸ்ரேலில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 3115 ஆக அதிகரித்துள்ளதோடு , 2907 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரணகுணமாகி வீடு திரும்பிள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 196 பேர் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் உள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button