செய்திகள்

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா…பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100..!

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று (23) பதிவாகினர்.

இதனிடையே, கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார்.

52 வயதான சுற்றுலா வழிகாட்டியே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி நாட்டில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்று நோயாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button