செய்திகள்

தனியார் நிறுவனத்திடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்! : CEB Sri Lanka

தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள தானியார் நிறவனத்திடம் இருந்து 128 மெகாவோட் மின்ராத்தை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி இதன்போது கிடைத்துள்ளது.

அத்தோடு இது தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அமைச்சின் ஊடகப் பேச்சாளரான சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button