செய்திகள்

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை குறித்து அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஆரம்பத்  திகதியை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோர்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தரம் ஐந்து புலமைப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஏனயை தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

ஒக்டோபர் 09 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டு, பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை குறித்து அறிவிப்பு

Back to top button