ஆன்மிகம்

(19.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope

19.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 06 ஆம் நாள் வியாழக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் வியாழக்கிழமை
திதி தசமி காலை 8.34 வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் உத்திராடம் மாலை 6.15 வரை பிறகு திருவோணம்
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம் பகல் 10.30 முதல் 11.30 வரை/ 12.30 முதல் 1.30 வரை
சந்திராஷ்டமம் மிருகசீரிடம் மாலை 6.15 வரை பிறகு திருவாதிரை
சூலம் தெற்கு
பரிகாரம் தைலம்

 

மேஷராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று மகா விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஷண்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

மிதுனராசி அன்பர்களே!

மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். ஷீர்டி சாய்பாபாவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைத் தவிர்த்துவிடலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங் களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். வேங்கடேச பெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்மராசி அன்பர்களே!

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தா லும் உற்சாகமாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர். சூரியபகவானை வழிபடுவதன் மூலம் இன்றைய நாள் உற்சாகமானதாக இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்திலும் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத் தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவி கிடைப்பதால் உற்சாகமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும். துர்கை வழிபாடு தடைகளைத் தகர்த்து வெற்றி பெற வைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாகத் தேடிய பொருள் கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலாராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடுபடவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். குலதெய்வத்தை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்மை தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

விருச்சிகராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் அனு கூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது அனுகூலப் பலன்களைத் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசுராசி அன்பர்களே!

நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத் தில் லாபம் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாகக் கிடைக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் தடையின்றி சாதகமாக முடியும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரராசி அன்பர்களே!

உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். குடும்பத்தில் உற வினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். அலுவ லகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். பைரவரை வழிபடுவதன் மூலம் பல வகைகளில் நன்மை ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று சாதிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சா கமாக இருப்பீர்கள். லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீனராசி அன்பர்களே!

அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்பட முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

Back to top button