செய்திகள்

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் – வாகனங்கள் தீக்கிரை

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில்  பஸ் ஒன்றும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (23-feb-2020).

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை 1

இதே வேளை பஸ்ஸிற்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வேனும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வேன் சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை 2

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வேனுமே மோதியுள்ளது.

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை 3

இதன்போது அங்கிருந்தவர்களால் பஸ்ஸிற்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வேனும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வேனுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை 4

காயமடைந்தவர்கள் அம்புயூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நால்வர் பலியாகியதுடன் இருபது பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை 5

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை 6

வவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம்; நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை 7

Sources : Virakesari.lk

Back to top button