24 மணித்தியாலத்தில் பிரான்சில் 1417 பேர் பலி
பிரான்சில் 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரசினால் 1417 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10328 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சின் பொது சுகாதார அதிகார சபையின் தலைவர் ஜெரோம் சலோமன் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று உயிரிழப்புகள் 16 வீதத்தினால் அதிகரித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை பிரான்சில் 883 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலி ஸ்பெயின் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரான்சிலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சின் பல பகுதிகள் தொடர்ந்தும் முடக்கல் நிலையில் காணப்படுகின்றன.
நியுயோர்க்கில் ஒரே நாளில் 731 பேர் பலி
நியுயோர்க்கில் ஒரே நாளில் கொரோனா வைரசினால் 731 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியுயோர்க் ஆளுநர் அன்ரூ கியுமோ இதனை அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் உயிரிழப்புகள் குறைவடைந்து காணப்பட்ட பின்னர் மீண்டும் 731 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் 731 பேரை இழந்துள்ளோம், அந்த எண்ணிக்கையின் பின்னால் ஒரு தனிநபர் காணப்படுகின்றார்,ஒரு குடும்பம் காணப்படுகின்றது ஒரு தந்தை காணப்படுகின்றார் ஒரு தாய் காணப்படுகின்றார் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.