செய்திகள்
இலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் !
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த 60 வயதுடைய மாரவில பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் காணப்பட்ட மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.