செய்திகள்
இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரான வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுனராக செயற்பட்டவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் இன்றைய தினம் கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.