”வீணாக பதற்றமடையாமல் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்”: எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்வது?
சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக்கொண்டுள்ள சூழலில் இலங்கையிலும் இந்த வைரஸ் தொற்றின் அபாயம் குறிப்பிடத்தக்கவகையில் அதிகரித்துள்ளதுடன் மேலும் பரவும் அபாயத்தைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் அனைத்து மக்களும் இதுதொடர்பான விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என்பதுடன் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தற்போதைய சூழலில் இலங்கையைப் பொறுத்தவரையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று இரண்டு வெளிநாட்டவர்களுடன் 64 பேர் கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்குேமா என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நாடளாவிய ரீதியில் பல மருத்துவமனைகளில் இவ்வாறு அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை திரும்பிய மொத்தமாக 1100 பேர் பற்றிகலோ கம்பஸ் மற்றும் கந்தக்காடு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அவதானிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாடளாவிய ரீதியில் 14 வைத்தியசாலைகள் இந்த கொரோனா வைரஸ் நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பரிசோதனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அதனைத் தடுக்கும் நோக்கில் அல்லது அதிலிருந்து தம்மை மக்கள் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கிறது. மிக முக்கியமாக தற்போது புதிய சில ஏற்பாடுகள் மிக வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏனைய விமான சேவை நிறுவனங்களுக்கும் இத்தாலி, தென்கொரியா, ஈரானிலிருந்து எந்தவொரு பயணியையும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டாம் என விமான சேவைகள் அதிகார சபை அறிவித்திருக்கிறது. உலகின் அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் இந்த அறிவித்தல் சென்றுள்ளது. இந்த நடைமுறை இன்று 14 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வருகிறது.
விமான பயணங்கள்
ஏற்கனவே இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகளை தனிமைப்படுத்தி 14 நாட்கள் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது அந்த நாடுகளிலிருந்தான விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டு பயணிகளை வேறு விமானசேவை நிறுவனங்களும் இலங்கைக்கு அழைத்து வரக்கூடாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது இவ்வாறிருக்க இலங்கையில் நேற்றுமுதல் தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி இலங்கையில் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வருகை தரு விசா நடைமுறை நிறுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும் கடந்த சில தினங்களாக சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. அதற்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. அதாவது அந்த நாட்டிலிருந்து தற்போது இந்த வைரஸ் பரவுவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாப்பதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டியது அவசியமாகும்.
எந்தவொரு குறைபாடும் இந்த விடயத்தில் இருக்கக்கூடாது. இதனைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கியிருக்கிறது. முக்கியமாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்ததாகவே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள் அமைந்திருக்கின்றன.
சுகாதார அறிவுறுத்தல்கள்
அதன்படி கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவவேண்டியது அவசியமாகும். 20 விநாடிகள் தொடர்ச்சியாக கைகளைக் கழுவுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று தேவையற்ற விதத்தில் எந்நேரமும் மக்கள் தமது கைகளினால் வாய், மூக்கு, கண்களை தொடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கி
ன்றது. இருமும்போது துணியினால் மூக்கு, வாய்ப்பகுதிகளை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களைத் தவிர்க்குமாறும் கோரப்பட்டிருக்கிறது. தேவையின்றி அடிக்கடி பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கைகளை வைப்பதை தவிர்ப்பதும் சிறந்ததாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
காய்ச்சல், தடுமல், மூச்சுத்திணறல் போன்ற சுகவீனங்கள் ஏற்பட்டால் மருத்துவரை நாடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும் இலங்கை சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகின்ற புதிய அறிவுறுத்தல் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக ஒருவர் தும்மும்போது அவரின் உமிழ்நீர் துகல்கள் அருகிலுள்ள பல பொருட்களில் படியும். அந்த பொருட்களில் ஏனையவர்கள் கைவைத்துவிட்டு அந்தக் கையினால் மூக்கு, வாயை தொடும் போது தொற்று பரவுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. எனவே இதற்கு கைகளை கழுவுவதே மிக முக்கியமான ஒரு வழியாக அமைந்திருக்கின்றது.
உமிழ்நீர்
இந்த வைரஸ் தொற்றானது உமிழ்நீரினால் மட்டுமே பரவுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது காற்றினால் பரவுவது இல்லை. எனவே இரண்டுபேர் உரையாடும்போது குறிப்பிடத்தக்க இடைவெளியைப் பேணுவது சிறந்ததாக இருக்கும். அதுமட்டுமன்றி நோயாளி ஒருவருக்கு அருகில் இருப்பவர் முகக்கவசத்தை அணியவேண்டும். அதேபோன்று வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்றவர்கள் முகக்கவசத்தை அணிவது அவசியமானது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இலங்கையில் தற்போது இருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். அதற்காக மக்கள் தொடர்ந்தும் பதற்றமடையவேண்டிய அவசியமில்லை. சரியான முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் இதிலிருந்து மீள முடியும். பொறுப்புடன் செயற்படுங்கள்
எனவே இதனை ஒரு நெருக்கடி மிக்க காலமாகக் கருதி மக்கள் தொடர்ச்சியாக விழிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட ஏற்பட்டுள்ள நிலையில் அவர் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் மோசமான நிலையில்
கொரோனா வைரஸ் தாக்கம் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம், உலகளாவியரீதியில் சரிவடைந்து செல்லும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து என்பன ஸ்தம்பிதமடைந்துள்ளன. இன்றைய நிலைமையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளன. முழு உலகையும் ஒரு கிராமம் என்றே கூறுகின்றனர். எனவே பல்வேறு வழிகளிலான தொடர்புகள் அதிகரித்துள்ளன. எனவே இதுபோன்ற வைரஸ் தொற்று நோய்கள் உலகளாவிய மட்டத்தில் பரவுவதற்கான அபாயம் அதிகரித்து காணப்படுகின்றது. அதனால் இங்கு நாம் செய்யவேண்டியது என்னவெனில் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதாகும்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சும் பாதுகாப்பு தரப்பினரும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. முக்கியமாக அந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி சுகாதார முறைமைக்கூடாக செயற்படுவதே தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கின்றது. அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளைக்கழுவும் கலாசாரம்
உலகளாவிய ரீதியில் கட்டாயமாக முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இது இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மட்டுமல்ல எந்தவொரு நோய்த் தொற்றிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முக்கியமாக அமைகின்றது.
கை கழுவுவதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்
இது தொடர்பில் சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் அறிவுறுத்தல்களை வழங்குகையில்,
வயது முதிர்ந்தவர்களை இந்த வைரஸ் அதிகளவில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஏற்கனவே ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் இதில் கவனமாக இருக்கவேண்டும். நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும். இங்கு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் பேசப்படுகின்றது. உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதுடன் உரிய உடற்பயிற்சிகளை செய்துவந்தால் எந்த நோயிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே போஷாக்கான உணவை உட்கொள்தல், புகை மற்றும் மதுவை பயன்படுத்தாதிருத்தல், உடற்பயிற்சிகளைச் செய்தல் என்பன முக்கியமாகும். சுகாதார பழக்க வழக்கங்களைப் பேணுவது அவசியமாகும். கை கழுவுதல் என்பது ஒரு கலாசாரமாக மாறவேண்டும். தற்போதைய நிலைமையில் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிருங்கள். கூட்டம் கூடுவதையும் தவிர்ப்பது சிறந்தது. முடியுமானவரை வீடுகளில் இருங்கள். வெளிநாடுகளில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் யாராவது வந்திருந்தால் அவர்களுடன் சுகாதார அறிவுறுத்தல்களின்படி செயற்படுங்கள் என்று குறிப்பிட்டார்.
வெப்பநிலை
இதேவேளை இலங்கையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் மக்களைதாக்காது என்று பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டு வருகிறது. எனினும் அது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கையின் வெப்பநிலை 30பாகை செல்சியஸைத் தாண்டியே நீடித்து வருகிறது. அந்த உயர்வெப்பநிலை காரணமாக இதனை முறியடிக்க முடியுமா என்பது இன்னும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கூட உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எப்படியிருப்பினும் தற்போது இருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கை மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகும். அதற்காக வீண் பதற்றமடையவேண்டிய அவசியமில்லை. ஆனால் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அத்தியாவசியமாகும். எம்மை இந்த நோயிலிருந்து பாதுகாத்துக ்கொள்வதற்கு முதலில் நாமே பொறுப்புடனும் முன்னெச்சரி க்கையுடனும் இருக்கவேண்டியது இன்றியமையாதது. அத்துடன் இதனை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது கட்டாயமாகும்.