செய்திகள்

This day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 19

இன்றைய நாள் நிகழ்வுகள்:

356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியஸ் உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.

1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிஸ்மண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.

1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.

1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.

1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூயோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1807 – அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1876 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.[1]

1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.

1884 – 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.

1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.

1915 – முதலாம் உலகப் போர்: தார்தனெல்ஸ் நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 ஜப்பானியப் போர் விமானங்கள் அவுஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஜப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.

1948 – விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.

1954 – கிரிமியாவை ரஸ்ய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.

1959 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.

1965 – வியட்நாம் குடியரசு இராணுவத் தளபதி பாம் ஙொக் தாவோ, வடக்கு வியட்நாம் வியட் மின் கம்யூனிச உளவாளியுடன் இணைந்து (அனைவரும் கத்தோலிக்கர்கள்) தெற்கு வியட்நாமில் பௌத்தரான நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தனர்.

1978 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.

1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.

1985 – எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.

1986 – உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

2002 – நாசாவின் மார்ஸ் ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.

2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.

2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

2012 – மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய நாள் பிறப்புகள்:

1473 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1543)

1630 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1680)

1821 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (இ. 1868)

1855 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)

1859 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (இ. 1927)

1906 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி (இ. 1973)

1922 – தரம்பால், உத்தரப் பிரதேச காந்தியவாதி, வரலாற்றாளர் (இ. 2006)

1922 – பியான்ட் சிங், இந்திய அரசியல்வாதி, பஞ்சாப் முதலமைச்சர் (இ. 1995)

1930 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர்

1941 – டேவிட் கிராஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1953 – கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர், அர்ச்செந்தீனாவின் 52வது அரசுத்தலைவர்

1960 – இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்

1989 – சரண்யா மோகன், தென்னிந்திய நடிகை.

1993 – விக்டோரியா ஜஸ்டிஸ், அமெரிக்க நடிகை, பாடகி

இன்றைய நாள் இறப்புகள்:

1553 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1511)

1897 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1815)

1915 – கோபால கிருஷ்ண கோகலே, இந்திய மெய்யியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)

1916 – எர்ன்ஸ்ட் மாக், ஆத்திரிய-செக் இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1838)

1937 – சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, தமிழக நாதசுவர இசைக் கலைஞர் (பி. 1884)

1950 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை யேசு சபை மதகுரு, வரலாற்றாளர் (பி. 1882)

1962 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் (பி. 1883)

1981 – ஜி. நாகராஜன், தமிழகச் சிறுகதை எழுத்தாளர் (பி. 1929)

1988 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1913)

1997 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (பி. 1904)

2003 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி (பி. 1918)

2012 – பெடரிக்கு இசுட்டால், டச்சு மெய்யியலாளர் (பி. 1930)

2014 – ஜிம் விரிச், அமெரிக்கக் கணிணி அறிவியலாளர் (பி. 1956)

2016 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலியக் குறியியலாளர், எழுத்தாளர் (பி. 1932)

2016 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)

Sources : Virakesari.lk

Back to top button