செய்திகள்

மீண்டும் நெஞ்சைப் பிழியும் சோகம்! உடல் சிதறிப் பலியான சிறுவர்கள்!

சூடானில் எதிர்பாராத வகையில் குண்டு வெடித்ததில் எட்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக முயன்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பணத்துக்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை குறித்த சிறுவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாமாக உயிரிழந்துள்ளனர்.
மீண்டும் நெஞ்சைப் பிழியும் சோகம்! உடல் சிதறிப் பலியான சிறுவர்கள்! 1

Back to top button