செய்திகள்

யானையை அடக்கும் மந்திரம் எனக்கு தெரியும்!! அமைச்சர் சஜித் சவால்..

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவில் நிச்சயமாக பெயரிடப்படுவார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதையடுத்து, நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை உறுதிப்படுத்த உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யானைகளை கட்டுப்படுத்தும் விதம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தனக்கு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான மந்திரம் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை கூறிய அவர், வனப்பகுதிக்கு சென்று அதனை நிரூபித்து காட்டவும் தாம் தயார் என அவர் சவால் விடுத்துள்ளார்.

sources :- hirunews.lk

Back to top button